தேக்கு மரம் வெட்டி கடத்தல் : புதுச்சேரி தொழிலதிபர் கைது

தேக்கு மரம் வெட்டி கடத்தியதாகக் கூறி, புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேக்கு மரம் வெட்டி கடத்தல் : புதுச்சேரி தொழிலதிபர் கைது
x
தேக்கு மரம் வெட்டி கடத்தியதாகக் கூறி, புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் சரணாலயத்தில் தேக்கு மரம் வெட்டி கடத்தியதாக வன ஊழியர் முருகன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், கடத்தப்பட்ட தேக்கு மரங்களை புதுச்சேரியை சேர்ந்த கார்த்திகேயன் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து, கார்த்திகேயனிடம் இருந்து 70 தேக்கு மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் , அவரை சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்