ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு : அப்பல்லோ வழக்கறிஞர் மஹிபுனா பாஷா தகவல்
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு மருத்துவர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக அப்போலோ மருத்துவமனை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த, அப்பல்லோ வழக்கறிஞர் மஹிபுனா பாஷா, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியது இருந்ததால் ஆணையம் அளித்த சம்மன் காலத்திற்குள் மருத்துவர்கள், ஆஜராக முடியவில்லை என்றும், இதனால் கால அவகாசம் கேட்டிருந்ததாகவும் கூறினார். மேலும், ஆணையத்திற்கு தேவையான அனைத்து ஆதாரங்களையும் அளித்து வருவதாகவும், அடுத்த வாரம் மேலும் சில மருத்துவர்கள் ஆஜராவார்கள் என்றும் அப்பல்லோ வழக்கறிஞர் மஹிபுனா பாஷா கூறினார்.
Next Story