சிறையில் இந்தி நிகழ்ச்சிகளே ஒளிபரப்புகின்றனர் : விடுதலை செய்யப்பட்ட கைதிகள் புகார்

மதுரை மத்திய சிறையில் இருந்து இன்று ஒரு பெண் உட்பட 68 ஆயுள் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் இந்தி நிகழ்ச்சிகளே ஒளிபரப்புகின்றனர் : விடுதலை செய்யப்பட்ட கைதிகள் புகார்
x
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நன்னடத்தை காரணமாக மதுரை மத்திய சிறையில் இருந்து கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆறாம் கட்டமாக, இன்று, ஒரு பெண் கைதி உள்பட 68 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதுவரை 7 கட்டமாக 168 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறையில் இருந்து வெளிவந்த கைதிகளை, உறவினர்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், சிறையில், இந்தி நிகழ்ச்சிகளே பெரும்பாலும் ஒளிபரப்ப‌ப்படுவதாக குற்றம்சாட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்