காவல்துறை விசாகா குழுவை மாற்றக் கோரி பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி உயர்நீதிமன்றத்தில் மனு

காவல்துறையில் ஏற்படுத்தப்பட்ட விசாகா குழுவை மாற்றி அமைக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
காவல்துறை விசாகா குழுவை மாற்றக் கோரி பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி உயர்நீதிமன்றத்தில் மனு
x
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பெண் எஸ்.பி., தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஐஜி-க்கு எதிராக புகார் அளித்தார். இதனை கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையிலான விசாகா குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த குழுவை மாற்றியமைக்க கோரியும், சம்பந்தப்பட்ட ஐஜியை பணி மாற்றம் செய்து,  குற்ற நடவடிக்கை எடுக்க கோரியும், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சத்ருகனா புஜாரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐஜி தொடர்ந்து அந்த பதவியில் நீடித்தால் சாட்சிகளை கலைக்க கூடும் எனவும் இந்த வழக்கில் விசாகா குழுவை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட வேண்டும் எனவும் பெண் அதிகாரி தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, விசாகா குழுவை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையை 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்