100 ஆண்டுகளை கடந்து செயல்படும் காராமணிக்குப்பம் சந்தை

கடலூர் அருகே 100 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது காராமணிக்குப்பம் சந்தை.
100 ஆண்டுகளை கடந்து செயல்படும் காராமணிக்குப்பம் சந்தை
x
விரல் நுனியில் அத்தனை மளிகைப் பொருட்களையும் ஆன்லைனில் வாங்கிவிடலாம் என்ற நகரவாசிகளுக்கு சவால் விடும் வகையில் செயல்படும் சந்தைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது. அப்படி ஒரு சந்தையாக இருக்கிறது கடலூர் அருகே உள்ள காராமணிக்குப்பம் சந்தை. கடலூர் - பண்ருட்டி சாலையில் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காரமணிக்குப்பம் சந்தைக்கு வயது 100ஐ விட அதிகம்.

பல தலைமுறை ஆட்களை கடந்து இன்றும் பொலிவு மாறாமல் நிறைவாக பொருட்களை வாங்கிச் செல்லும் இடம் என்ற அடையாளத்தை பெற்றிருக்கிறது. தோட்டத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், கீரைகள், பழங்கள் என எல்லாம் இங்கே குறைவான விலையில் வாங்கிச் செல்ல முடியும். அதுமட்டுமின்றி வீட்டுக்கு தேவையான இரும்பு சாமான்கள், செடி வகைகள், மளிகைப் பொருட்களும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்