தூக்கில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவர் : தன் தற்கொலையை தானே செய்தியாக வெளியிட்ட பரிதாபம்
கல்லூரி மாணவர் ஒருவர் தனது தற்கொலை செய்தியை வாட்ஸ் ஆப்பில் நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு, தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த ராசிப்பட்டியை சேர்ந்த ராமர் என்ற கல்லூரி மாணவர், நேற்று தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தனது நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ செய்தியில், ராசிப்பட்டி ஊருக்குள் உள்ள இரண்டு குடும்பங்கள் தான் தனது தற்கொலைக்கு காரணம் என குறிப்பிட்டுவிட்டு அவரது தற்கொலையை செய்தியாக வெளியிடுவது போல குறிப்பிட்டிருந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த ராமரின் நண்பர்கள், அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். அருகே உள்ள மலைப்பகுதியில், ராமர் சடலமாக தொங்குவதை கண்ட பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் கொடுக்க, நள்ளிரவில் ராமரின் உடல் மீட்கப்பட்டது. கிராமம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story