நீலகிரி : அடிக்கடி வாகனங்களை மறிக்கும் ஒற்றை காட்டு யானை
நீலகிரி மாவட்டம் மஞ்சூர்-கோவை சாலையில் அடிக்கடி ஒற்றை காட்டு யானை வாகனங்களை வழிமறித்து வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர்-கோவை சாலையில் அடிக்கடி ஒற்றை காட்டு யானை வாகனங்களை வழிமறித்து வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். இதே போல் நேற்று ஒரு ஒற்றை காட்டு யானை சாலையை வழிமறித்து நின்றது. இதனை அறிந்த வாகன ஓட்டிகள் வாகனஙகளை சற்று தூரம் தள்ளியே வாகனங்களை நிறுத்தனர். சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னர் அந்த யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
Next Story