"சுற்றுலாத்தலங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்" - பன்வாரிலால் புரோகித்

சுற்றுலாத்தலங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தி உள்ளார்.
சுற்றுலாத்தலங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் - பன்வாரிலால் புரோகித்
x
சுற்றுலாத்தலங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தி உள்ளார். ஈரோடு பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்ட ஆளுநர், விழிப்புணர்வு ரதத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். 

தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

பின்னர், வ. உ.சி. பூங்கா மைதானத்தில் நடைபெற்ற தூய்மை இந்தியா உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன், மாவட்ட ஆட்சியர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்