சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய பரிந்துரையை திருப்பி அனுப்பியது மத்திய அரசு

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய பரிந்துரையை திருப்பி அனுப்பியது மத்திய அரசு
x
சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி, கடந்த ஒன்றாம் தேதி தமிழக அரசு அனுப்பி வைத்த ஆணை பிறப்பித்தது. அந்த அரசாணையை, மத்திய அரசுக்கும் தமிழக அரசு அனுப்பி வைத்தது. இதனை பரிசீலித்த மத்திய பணியாளர் அமைச்சகம், இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதற்கான போதிய ஆவணங்கள் இல்லை என கூறி, தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், தமிழக அரசின் பரிந்துரை ஆவணத்தில், முதல் தகவல் அறிக்கை கூட இணைக்கப்படவில்லை என்றும், முழு ஆவணங்களையும், அனுப்பும் பட்சத்தில் அதனை பரிசீலிக்க தயார் என்றும், குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்​நீதிமன்றம், இடைக்கால தடை விதித்திருப்பதால் அந்த உத்தரவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கலாம் என தமிழக, அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 



Next Story

மேலும் செய்திகள்