தேசிய கண் தான தினம் - விழிப்புணர்வு பிரசாரம்

தேசிய கண் தான தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலத்தில் 'அவேர்னஸ் அப்பா' என்பவர் பார்வையற்றோர் போல் நடித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார்.
தேசிய கண் தான தினம் - விழிப்புணர்வு பிரசாரம்
x
தேசிய கண் தான தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் 'அவேர்னஸ் அப்பா' என்பவர் பார்வையற்றோர் போல் நடித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார். தேசிய கண் தான தினத்தை முன்னிட்டு, கடந்த 25ம் தேதி முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை 15 மாவட்டங்களில், 'அவேர்னஸ் அப்பா, எனும் சிவசுப்ரமணியன்'  கண் தான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்கிறார். இதன் அடிப்படையில், சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில், கண்தானத்தின் அவசியம் குறித்து, பார்வையற்றோர் போல் நடித்து காட்டி அவர் பிரசாரம் செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்