முக்கொம்பு கொள்ளிடம் மேலணை மதகுகள் சீரமைப்பு...

திருச்சியில் கடந்த 22ஆம் தேதி இரவு இடிந்து விழுந்த முக்கொம்பு கொள்ளிடம் மேலணையின் ஒன்பது மதகுகளின் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
முக்கொம்பு கொள்ளிடம் மேலணை மதகுகள் சீரமைப்பு...
x
திருச்சியில் கடந்த 22ஆம் தேதி இரவு இடிந்து விழுந்த முக்கொம்பு கொள்ளிடம் மேலணையின் ஒன்பது மதகுகளின் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது படகின் மோட்டார் பழுதடைந்தடால் நின்று விட்டது. தண்ணீர் அதிகமாக வெளியேறும் பகுதியில் நின்று விட்டதால் அந்த ரப்பர் படகு அடித்து செல்லப்பட்டது. அந்த படகில் 2 தீயணைப்பு துறை வீரர்கள் இருந்தனர். அவர்கள் உடனடியாக படகை  அருகில் இருந்த மதகில் கட்டி வைத்து விட்டு நீந்தி வெளியேறினர். 

Next Story

மேலும் செய்திகள்