பழனி கோயில் உண்டியல் காணிக்கை சுமார் ரூ.1.55 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உண்டியலில், கடந்த 28 நாட்களில், 1 கோடியே 55 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.
பழனி கோயில் உண்டியல் காணிக்கை சுமார் ரூ.1.55 கோடி
x
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உண்டியலில், கடந்த 28 நாட்களில், 1 கோடியே 55 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. உண்டியல் நிறைந்ததை அடுத்து உண்டியல் திறக்கப்பட்டு ஐநூறுக்கும் மேற்பட்டோர் காணிக்கையை, எண்ணினர். அதில் ரொக்கமாக ரூபாய் 1 கோடியே 54 லட்சம் ரூபாய் கிடைத்தது. மேலும் தங்கத்தால் ஆன வேல், தாலி, மோதிரம், செயின், தங்ககாசு போன்றவையும், வெள்ளி பொருட்களும் காணிக்கையாக சுவாமிக்கு செலுத்தப்பட்டிருந்தது. மேலும் வெளிநாட்டு கரன்சிகளும், நவதானிய பொருட்களும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. 

Next Story

மேலும் செய்திகள்