மனைவிக்கு தெரியாமல் கணவரின் உடல் தகனம் : மகளுடன் காவல்நிலையத்தில் மனைவி தர்ணா
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனக்கு தெரியாமல் கணவரின் உடலை எரித்த உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனைவி புகார் அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனக்கு தெரியாமல் கணவரின் உடலை எரித்த உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனைவி புகார் அளித்துள்ளார். கணபதி நகரை சேர்ந்த சரண்யா கணவர் நர்மதனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் நர்மதன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், மனைவி சரண்யாவுக்கு தகவல் அளிக்காமல் நர்மதனின் உறவினர்கள் அவரது உடலை எரித்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சரண்யா தனது 10 வயது மகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story