பிரபல ரவுடிக்கு செப்டம்பர் 7ஆம் வரை தேதி சிறை : பொன்னேரி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு...

சென்னை எண்ணூரை சேர்ந்த பிரபல ரவுடி தனசேகரனை செப்டம்பர் 7ஆம் தேதி வரை காவலில் வைக்கும்படி நீதிபதி சதீஷ் குமார் உத்தரவிட்டார்.
பிரபல ரவுடிக்கு செப்டம்பர் 7ஆம் வரை தேதி சிறை : பொன்னேரி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு...
x
சென்னை எண்ணூரை சேர்ந்த பிரபல ரவுடி தனசேகரன்
திருவண்ணாமலையில் நேற்று கைது செய்யப்பட்டான். கடந்த 13ஆம் தேதி அன்று மர்ம நபர்களால் எண்ணூரை சேர்ந்த ஜேம்ஸ்பால் என்பவர் கொலை செய்யப்பட்டார். அவரை கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் மணலி புதுநகர் காவல்துறையினர் தனசேகரனை பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். செப்டம்பர் 7ஆம் தேதி வரை காவலில் வைக்கும்படி நீதிபதி சதீஷ் குமார் உத்தரவிட்டார். உத்தரவின் படி ரவுடி தனசேகரன் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.

Next Story

மேலும் செய்திகள்