கிணற்றில் தவறி விழுந்து பலியான சிறுவன் : ஆம்புலன்ஸ் வராததால் தந்தையே சடலத்தை தூக்கிய அவலம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கிணற்றில் இருந்த பந்தை எடுக்க முயன்ற 7 வயது சிறுவன் கால் தவறி விழுந்து பலியானான்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கிணற்றில் இருந்த பந்தை எடுக்க முயன்ற 7 வயது சிறுவன் கால் தவறி விழுந்து பலியானான். தேவிகாபுரம் சாலையில் உள்ள மைதானத்தில் பாபு என்பவரது மகன் சுரேந்திரன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தான். அப்போது பந்து கிணற்றில் விழுந்ததால், அதனை எடுக்க போன சிறுவன் கால் தவறி விழுந்தான். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி சிறுவனை சடலமாக மீட்டனர். சடலத்தை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வராததால், தந்தையே மகனின் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது அனைவரையும் கண்கலங்க செய்தது.
Next Story