கதவில் சிக்கிய குட்டி கரடியை மீட்க தாய் கரடி பாசப் போராட்டம்...

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் சிக்கிய குட்டி கரடியை காப்பாற்ற தாய் கரடி நடத்திய பாசப் போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கதவில் சிக்கிய குட்டி கரடியை மீட்க தாய் கரடி பாசப் போராட்டம்...
x
டானிங்டன் பெந்தட்டி சாலையில் கரடி ஒன்று தனது இரு குட்டிகளுடன் உலா வந்துகொண்டிருந்தது. அப்போது குட்டி கரடி ஒன்று எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் உள்ள குடியிருப்பின் இரும்பு கதவில் சிக்கி கொண்டது. இதயைடுத்து அந்த குட்டி கரடியை மீட்க தாய் கரடி நீண்ட நேரம் போராடியது. கரடிகளின் அலறல் சத்தத்தை கேட்ட பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். பின்னர் அங்கு சென்ற வனத்துறையினர், தாய் கரடியை துரத்தி விட்டு குட்டி கரடியை மீட்டனர். சுமார் 2 மணிநேரத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்ட குட்டி கரடி,  தாய் கரடியுடன் சேர்ந்து தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. 

Next Story

மேலும் செய்திகள்