மதுரை ஆவணி மூல திருவிழா : புட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெற்றது

மதுரையில் ஆவணி மூல திருவிழாவின், முக்கிய நிகழ்வான புட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெற்றது.
மதுரை ஆவணி மூல திருவிழா : புட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெற்றது
x
மதுரையில் ஆவணி மூல திருவிழாவின், முக்கிய நிகழ்வான புட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெற்றது. கோயிலில் இருந்து சொக்கநாதர், மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் ஆரப்பாளையம் வைகை ஆற்றோரம் உள்ள புட்டுத்தோப்பு சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளினார். மேலும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடனும், திருவாதவூர் அருளாளர் மாணிக்கவாசகர் ஆகியோரும் எழுந்தருளினர். இதில் சுவாமி வேடமணிந்த பட்டரும், மன்னர் வேடமணிந்த பட்டரும் சுவாமி புட்டுக்கு மண் சுமந்த லீலையை நிகழ்த்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்