கடைமடைக்கு வந்த காவிரி தண்ணீர்...

காவிரி நீர் கடைமடைக்கு வந்ததை தொடர்ந்து, நாகை விவசாயிகள் வேளாண் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடைமடைக்கு வந்த காவிரி தண்ணீர்...
x
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் தேவநதி, வெட்டாறு உள்ளிட்ட ஆறுகள் வழியாக கடைமடை பகுதியான நாகை மாவட்டம் பாலையூரை வந்தடைந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் நேரடி மற்றும் நடவு முறையில் நெல் விதைப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.பாசன வடிகாலில் ஓடும் தண்ணீரை வயல்களில் பாய்ச்சும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை, முறை வைக்காமல், தொடர்ந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என பாலையூர் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்