மனைவி, கள்ளக்காதலனை வெட்டிச் சாய்த்த கணவன்...

தவறான உறவில் ஈடுபட்டிருந்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை, கணவர் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி, கள்ளக்காதலனை வெட்டிச் சாய்த்த கணவன்...
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மும்மலைப்பட்டியை கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்... இவர் மனைவி தங்கமாரியம்மாள்... இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். ஹரிகிருஷ்ணன் கேரள மாநிலத்தில் கட்டட வேலை செய்து வருகிறார். இதற்காக அவர் கேரள மாநிலத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். அவ்வப்போது விடுமுறை நாட்களில் மட்டும் ஊருக்கு வந்து மனைவியை பார்த்து விட்டு செல்வது வழக்கம். இந்த சூழ்நிலையில் ஹரிகிருஷ்ணனின் மனைவி தங்கமாரியம்மாளுக்கும், அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஹரிகிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல் சொந்த ஊருக்கு வந்துள்ளார்... சம்பவத்தன்று தன் மனைவியை இரவு நேரத்தில் காணவில்லை என தேடிய போது, அருகே இருந்த காட்டுப்பகுதியில் தங்கமாரியம்மாளும்  பெருமாளும் இருந்தது தெரியவந்தது. இதில் ஆத்திரமடைந்த ஹரிகிருஷ்ணன், அரிவாளை எடுத்து அவர்கள் இருவரையும் வெட்டிச் சாய்த்தார். இதில் அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.  பின்னர் கடம்பூர் காவல் நிலையம் சென்ற ஹரிகிருஷ்ணன், நடந்த சம்பவங்களை கூறி சரணடைந்தார். உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தவறான உறவு காரணமாக இன்று 2 குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் நிர்கதியாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளளது.


Next Story

மேலும் செய்திகள்