சிலை கடத்தல் வழக்கில் அரசுக்கு புதிய உத்தரவு

சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.-க்கு மாற்றுவது தொடர்பாக அரசுக்கும், காவல் துறைக்கும் இடையே நடந்த கடித பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலை கடத்தல் வழக்கில் அரசுக்கு புதிய உத்தரவு
x
* சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.-க்கு மாற்றியதை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி  தாக்கல் செய்த வழக்கு 

நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

* தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜயநாராயண், ஏற்கனவே இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

* இந்த வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்றியது தொடர்பாக தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் இடையே நடந்த கடிதப் பரிமாற்றங்கள் தொடர்பான  ஆவணங்களை வழங்க வேண்டும் என மனுதாரர் யானை ராஜேந்திரன் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், அந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். 

* மேலும் இந்த வழக்கில் சி.பி.ஐ.-க்கு நோட்டீஸ் அனுப்ப மனுதாரரான ராஜேந்திரனுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 7-க்கு தள்ளிவைத்தனர்.

* இதற்கிடையில், கோவில்களுக்கு வெளியே அமைந்திருக்கும்  சிலைகள் பாதுகாப்பு அறைகளில் இருந்து சிலைகள் சுலபமாக திருடப்படுவதாக மனுதாரர் யானை ராஜேந்திரன் குற்றம் சாட்டினார். இது குறித்தும் செப்டம்பர் 7 ஆம் தேதி பதிலளிக்குமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்