மதுரை தனியார் நூற்பாலைக்கு வெடி குண்டு மிரட்டலால் பரபரப்பு

மதுரையில் உள்ள மதுரா கோட்ஸ் ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை தனியார் நூற்பாலைக்கு வெடி குண்டு மிரட்டலால் பரபரப்பு
x
மதுரையில் உள்ள மதுரா கோட்ஸ் ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காலை 7 மணியளவில் மர்ம நபர் ஒருவர் நூற்பாலையில் வெடிகுண்டு இருப்பதாக தொலைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்தார். இது குறித்து புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, கரிமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்களுடன் விரைந்து வந்து சோதனை நடத்தினர். நேற்று பல கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சு, ஆலைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்