கிராமத்திற்குள் திரியும் காட்டு யானை : பிடித்து செல்ல கோரி மக்கள் சாலை மறியல்

கோவை மாவட்டம் ஆனைகட்டி மலை, ஆலமரம் மேடு, கொண்டனூர் ஆகிய ஆதிவாசி கிராமங்களில், ஒரு காட்டு யானை நீண்ட நாட்களாக மக்களை அச்சுறுத்தி வருகிறது.
கிராமத்திற்குள் திரியும் காட்டு யானை : பிடித்து செல்ல கோரி மக்கள் சாலை மறியல்
x
கோவை மாவட்டம் ஆனைகட்டி மலை, ஆலமரம் மேடு, கொண்டனூர் ஆகிய ஆதிவாசி கிராமங்களில், ஒரு காட்டு யானை நீண்ட நாட்களாக மக்களை அச்சுறுத்தி வருகிறது. வனத்துறையினர் யானையை உடனடியாக பிடித்து செல்ல வலியுறுத்தி, ஆதிவாசி மக்கள் கோவை-கேரளா நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் யானையை காட்டிற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்

Next Story

மேலும் செய்திகள்