கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் ஆனால் கடைமடைக்கு வராத தண்ணீர் - விவசாயிகள் மறியல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே, கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததைக் கண்டித்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் ஆனால் கடைமடைக்கு வராத தண்ணீர் - விவசாயிகள் மறியல்
x
கொள்ளிடம் ஆற்றில் இருந்து, வடவாறு பாசனத்திற்கு, பாலையூர் வாய்க்கால்களில் இருந்து கண்ணாரப்பேட்டை, துளசேந்திரபுரம், தென்பரை உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வருவது வழக்கம். ஆனால் தற்போது ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்லும் நிலையிலும், கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேராததால்,விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனைக் கண்டித்து, திருமக்கோட்டை- மன்னார்குடி சாலையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்