வீடுகள் தரைமட்டமானதால் பொதுமக்கள் சோகம் - வீடு கட்டி தர கோரிக்கை
பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானதால் பொதுமக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்
* பவானி சாகர் அணையில் இருந்து 75 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக, பகுடுதுறை, தொட்டம்பாளையம், கெஞ்சனூர் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 750க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
* தற்போது வெள்ளநீர் வடிந்ததால், முகாமில் உள்ள மக்கள் வீடுகளுக்கு திரும்பினர். 3 நாட்களுக்கு மேலாக வெள்ள நீரில் ஊறிய வீடுகள் இடிந்து தரைமட்டமானதை பார்த்து அவர்கள் வேதனை அடைந்தனர்.
* தங்களின் நலன் கருதி, உடனடியாக வீடுகளை கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் .
Next Story