ஐ.ஜி மீது பெண் எஸ்.பி பாலியல் புகார்

பெண் போலீஸ் மற்றும் அரசு பெண் ஊழியர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க,விசாகா கமிட்டி கூடுதல் டி ஜி.பி சீமா அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஐ.ஜி மீது பெண் எஸ்.பி பாலியல் புகார்
x
பெண் போலீஸ் மற்றும் அரசு பெண் ஊழியர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க,விசாகா கமிட்டி  கூடுதல் டி ஜி.பி சீமா அகர்வால் தலைமையில் அமைக்கப் பட்டுள்ளது.ஏற்கனவே இருந்த  கமிட்டியின் உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற நிலையில் கூடுதல்  டி.ஜி.பி சீமா அகர்வால் தலைமையில்  புதிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் , கூடுதல் டி.ஜி.பி அருணாசலம்,காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி தேன்மொழி,ஓய்வுபெற்ற கூடுதல் சூப்பிரண்டு சரஸ்வதி,டி.ஜி.பி அலுவலக சீனியர் நிர்வாக அதிகாரி ரமேஷ் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.இந்த கமிட்டி  அமைக்கப்பட்ட ஒரே நாளில், பெண் எஸ்.பி ஒருவர்,காவல் துறை ஐ.ஜி ஒருவர்  மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.இந்த புகாரை சீமா அகர்வால் தலைமையிலான குழு  முதல் புகாராக ஏற்று,விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  
   

ஐ.ஜி மீது பெண் எஸ்.பி பாலியல் புகார் - ஓய்வு பெற்ற   ஐ.பி.எஸ்அதிகாரி திலகவதி கருத்து


ஐ.ஜி மீது பெண் எஸ்.பி பாலியல் புகார் -  ஓய்வு பெற்ற காவல் அதிகாரி சித்தண்ணன் கருத்து


ஐ.ஜி மீது பெண் எஸ்.பி பாலியல் புகார் - வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் கருத்து


Next Story

மேலும் செய்திகள்