கேரள கனமழை எதிரொலி - நாமக்கல்லில் முட்டைகள் தேக்கம்
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் காரணமாக, நாமக்கல்லில் இருந்து கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
* நாமக்கல் மண்டலத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு, நாள் ஒன்றுக்கு ஒருகோடியே 10 லட்சம் முட்டைகள் அனுப்பப்படுகின்றன.
* இந்தநிலையில், கேரளாவில் கடந்த 2 வாரங்களாக பெய்த கனமழை காரணமாக, ஆங்காங்கே சாலைகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து தடைபட்டுள்ளது.
* இதனால் கடந்த ஒரு வாரமாக கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. இதனால், சுமார் பத்து கோடி ரூபாய் மதிப்பிலான முட்டை வணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதேநிலை நீடித்தால், முட்டையின் விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
Next Story