சேதமடைந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி : சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் ஆய்லசேரி ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கிலி குப்பம் கிராமத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி : சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
x
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த பள்ளியின் மேற்கூரைகள் பலவீனமாக காணப்பட்டு வருகிறது.இதனால் மழைக் காலங்களில் மழை நீர் வகுப்பறைக்குள் வருவதால் பள்ளி குழந்தைகள் கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இதே போல் பள்ளி கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு கான்கீரிட் கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் உள்ளது. 

இதனால் எந்த நேரத்திலும் கட்டிடம் இடிந்து விழும் என்ற அச்சம் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ளது.இதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக பள்ளி கட்டிடத்தை புதுப்பித்து தரும்படி தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்