கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை - விவசாயிகள் குற்றச்சாட்டு

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடும் நிலையில், தஞ்சை அருகே கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை - விவசாயிகள் குற்றச்சாட்டு
x
* கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடும் நிலையில், தஞ்சை அருகே  கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

* மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் விநாடிக்கு 2 லட்சம் கனஅடி வீதம் பெருக்கெடுத்து செல்கிறது. 

* இந்நிலையில் கல்லணையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூதலூர் அருகே புதுக்குடி, மனையேறிபட்டி, செங்கிப்பட்டி கிராமங்களுக்கு மாயனூரில் இருந்து கட்டளைக் கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

* ஆனால் இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வந்து சேராததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

* ஆடு, மாடுகள் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை எனவும், வாய்க்கால்களை முறையாக தூர்வாராததே தண்ணீர் வராததற்கு காரணம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்