பேத்தியின் சாவில் மர்மம்-பாட்டி புகார்

ஆரணியை அடுத்த இராட்டினமங்கலத்தில் வசித்து வருபவர் ரேணுகா. இவரது மகள் செளமியா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பேத்தியின் சாவில் மர்மம்-பாட்டி புகார்
x
* ஆரணியை அடுத்த இராட்டினமங்கலத்தில் வசித்து வருபவர் ரேணுகா. இவரது மகள் செளமியா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

* இதுபற்றி ரேணுகாவிடம் சவுமியாவின் பாட்டி கவுரி விசாரித்துள்ளார். அதற்கு ரேணுகா சரிவர பதில் அளிக்காததால், சந்தேகமடைந்த கவுரி உறவினர்களுடன் சென்று, போலீசில் புகார் அளித்துள்ளார். 

* இதையடுத்து அங்கு சென்று, செளமியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல போலீசார் முயன்றபோது, செளமியாவின் காதலர் என்று கூறப்படும் ரகுராமன் என்பவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

* அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ள போலீசார், செளமியா மற்றும் ரகுராமன்  ஆகியோர்  தற்கொலைக்கு முயன்றது ஏன் என்று விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்