பொறியியல் படிப்புக்கு 5 கட்ட ஆன்லைன் கலந்தாய்வு முடிவு : 70 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை
பொறியியல் படிப்புக்கு ஐந்து கட்டமாக ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற்று முடிவடைந்த நிலையில் 70 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்தனர்.
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த மாத இறுதியில் துவங்கியது. நான்கு கட்டமாக நடந்த கலந்தாய்வில் ஏற்கனவே 51 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்தனர். இந்நிலையில் 5 -வது ஆன்லைன் கலந்தாய்வு முடிவுற்றது. இதுகுறித்த முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டது. அதில், 21 ஆயிரத்து 647 மாணவர்களுக்கு, தற்காலிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி ஒதுக்கீட்டின் போது, 3 ஆயிரம் மாணவர்கள், ஏற்கனவே எடுத்த இடங்களை ரத்து செய்யலாம் என தெரிகிறது. இறுதியில் 70 ஆயிரம் மாணவர்கள் பொறியியல் படிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அரசு ஒதுக்கீட்டில் 1 லட்சம் இடங்கள் காலியாக உள்ள நிலை ஏற்பட்டுள்ளது.
Next Story