காவிரி கரையோர பகுதிகளில் "ரெட் அலார்ட்" எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட வாய்ப்பு உள்ளதால் கரையோர மக்களுக்கு ரெட் அலர்ட் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
காவிரி கரையோர பகுதிகளில் ரெட் அலார்ட் எச்சரிக்கை
x
கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி விட்டதால், காவிரியில் இருந்து வந்து சேரும் தண்ணீரை முழுமையாக அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே, கரையோரங்களில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட வாய்ப்பு உள்ளதால்,  கரையோர மக்களுக்கு ரெட் அலர்ட் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்