நாகூர் தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி : தொட்டில் கட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்

நாகூர் தர்காவில் அலங்கார வாசலில் அமைக்கப்பட்ட பந்தலில் குழந்தை தொட்டில் உள்ளிட்ட பொருட்களை கட்டி, இஸ்லாமியர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
நாகூர் தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி : தொட்டில் கட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
நாகூர் தர்காவில் சின்ன ஆண்டவர் என்று அழைக்கப்படும் யூசபொலியுல்லாவின் கந்தூரி விழா,கடந்த மாதம் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சின்ன ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, அலங்கார வாசலில் அமைக்கப்பட்ட பந்தலில் குழந்தை தொட்டில் உள்ளிட்ட பொருட்களை கட்டி, இஸ்லாமியர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

Next Story

மேலும் செய்திகள்