மதுரையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த இளைஞர் கைது

மதுரையில் தன் வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடியை பயிரிட்டு வளர்த்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த இளைஞர் கைது
x
மதுரையில் தன் வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடியை பயிரிட்டு வளர்த்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். மதுரை ஆத்திகுளம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர். கடந்த 6 மாதங்களுக்கு முன் கேரளாவில் இருந்து கஞ்சா செடியை வாங்கி வந்த சந்தோஷ் அதை தன் வீட்டில் வளர்த்து வந்துள்ளார். தன் பயன்பாட்டிற்கு போக மீதமுள்ள கஞ்சாவை விற்பனை செய்து வந்த சந்தோஷை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் பயிரிட்டு இருந்த கஞ்சா செடிகளையும் போலீசார் அழித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்