கோயில் நிலங்களை அடையாளம் காண தனி குழு : உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை

கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை அடையாளம் காணவும் அவற்றை மீட்கவும்,ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கோயில் நிலங்களை அடையாளம் காண தனி குழு : உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை
x
* தமிழக கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. 

* அதில், மாநிலம் முழுவதும் உள்ள 39 ஆயிரத்து 508  கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை அடையாளம் காண்பதற்கும் அவற்றை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்கு தனி குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.

* மேலும் ஒன்பதாயிரத்து 14 கோயில்களுக்கு சொந்தமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

* 3 ஆயிரத்து 807 கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள 28 ஆயிரத்து 617 வாடகைதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆறாயிரத்து 900 வாடகைதாரர்களிடம் இருந்து 14 கோடியே 80 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

*  இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களுக்கு சொந்தமாக 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், 22 ஆயிரத்து 600 கட்டிடங்களும் 33 ஆயிரத்து 565 காலியிடங்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* இதுவரை 6 ஆயிரத்து 202 கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், 14 ஆயிரத்து 21 பேர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது தெரியவந்திருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

* அறநிலையத் துறையின் அறிக்கை குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதி, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி கோயில் நிலங்களை மீட்பதற்கு கூடுதலாக 6 வாரம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்