சுதந்திர தின விழா முதல் நாள் அணிவகுப்பு ஒத்திகை

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையில், முதல் நாள் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது
சுதந்திர தின விழா முதல் நாள் அணிவகுப்பு ஒத்திகை
x
72-வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடுமுழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சென்னை தலைமை செயலகத்தில் தேசியக் கொடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுகிறார்.இதற்கான முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடந்தது. 
கமாண்டோ படை, குதிரைப்படை, பெண் காவலர்கள், தேசிய மாணவர் படை மற்றும் மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.  ஒத்திகை நிகழ்ச்சிக்காக, சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. 

விமானநிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு 

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை விமானநிலையத்திற்கு ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதிதிட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  பயணிகளை வழியனுப்ப வருபவர்கள் விமானநிலையத்திற்குள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்