கருணாநிதி உருவ பொம்மைக்கு இறுதிசடங்கு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள மொளசி பகுதியில்,மறைந்த கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது உருவ பொம்மைக்கு ஊர் மக்கள் இறுதி சடங்கு செய்தனர்.
கருணாநிதி உருவ பொம்மைக்கு இறுதிசடங்கு
x
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள மொளசி பகுதியில்,மறைந்த கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது உருவ பொம்மைக்குஊர் மக்கள் இறுதி சடங்கு செய்தனர். மேள தாளத்துடன் இறுதி ஊர்வலமாக சென்றவர்களில்  
3 பேர் மொட்டையடித்து கொண்டனர்.

அரசியல் கட்சிகள் சார்பில் அமைதிப் பேரணி




திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்துக் கட்சிகள் சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில், தி.மு.க., காங்கிரஸ், த.மா.கா., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தே.மு.தி.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர், காமராஜர் சிலையில் இருந்து தொடங்கிய இந்த பேரணி, முக்கிய வீதிகள் வழியாக  சென்று தேரடி வீதியில் நிறைவு பெற்றது.




Next Story

மேலும் செய்திகள்