8 வழிச்சாலை குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆலோசனை

மத்திய அரசின் நிதி உதவி மூலம் தமிழகத்தில் நடைபெற்றுவரும் சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுமான பணிகள் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் சென்னையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
8 வழிச்சாலை குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆலோசனை
x
* மத்திய அரசின் நிதி உதவி மூலம் தமிழகத்தில் நடைபெற்றுவரும் சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுமான பணிகள் குறித்து மத்திய அமைச்சர் நிதின்  கட்கரி தலைமையில் சென்னையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

* இந்த கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 

* 8 வழிச்சாலை திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் குறித்து இந்த கூட்டத்தில்,  மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

* கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசிடம் இருந்து முதலமைச்சர் நிதி பெற்றுவந்த நிலையில், அந்த  நிதியின் பயன்பாடு குறித்தும், அதன் மூலம் தமிழகத்தில் நடைபெற்றுவரும் உயர்மட்ட சாலைகள், பாலங்கள் கட்டுமான பணிகள் குறித்தும் நிதின் கட்கரி ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் 45 நிமிடங்கள் நடைபெற்றது. 


Next Story

மேலும் செய்திகள்