வாகன சோதனையின் போது கூவம் ஆற்றில் குதித்த இளைஞர் : சடலமாக மீட்பு

சென்னை அடையாற்றில் போலீசார் வாகன சோதனையின் போது கூவம் ஆற்றில் குதித்த இளைஞர் மூன்று நாட்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வாகன சோதனையின் போது கூவம் ஆற்றில் குதித்த இளைஞர் : சடலமாக மீட்பு
x
சென்னை அடையாற்றில் போலீசார் வாகன சோதனையின் போது கூவம் ஆற்றில் குதித்த இளைஞர் மூன்று நாட்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற இளைஞர் அடையாறு பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது  மது அருந்தி இருப்பதாக கூறி அவரது பைக் சாவியை போலீசார் எடுத்ததாக கூறப்படுகிறது. போலீசாரிடம் சாவியை திருப்பி தருமாறு கேட்ட ராதாகிருஷ்ணன், திடீரென அடையாறு கூவம் ஆற்றில் குதித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் தீயணைப்பு துறைக்கு தகவல் தர, அவர்கள் ராதாகிருஷ்ணனை தேடும் பணியில் ஈடுபட்டனர். மூன்று நாட்களுக்கு பின்னர், இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்