காவல் நிலைய நன்னடத்தை ஒப்பந்தத்தை மீறிய குற்றவாளி - ஓராண்டு சிறையில் அடைக்க துணை காவல் ஆணையர் உத்தரவு

சென்னையில் காவல் நிலைய நன்னடத் ஒப்பந்தத்தை மீறிய குற்றவாளியை ஒரு வருடம் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
காவல் நிலைய நன்னடத்தை ஒப்பந்தத்தை மீறிய குற்றவாளி - ஓராண்டு சிறையில் அடைக்க துணை காவல் ஆணையர் உத்தரவு
x
தேனாம்பேட்டையைச் சேர்ந்த  கார்த்திக்  மீது மாம்பலம், பாண்டிபஜார் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள்  உள்ளன. கார்த்திக்கின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் அவர் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு தர இனிவரும் காலங்களில் இதுபோன்ற குற்ற நடவடிக்கையில் ஈடுபட மாட்டேன் என ஒரு வருடத்திற்கு நன்னடத்தை சான்றிதழ் ஒப்புதல் அவரிடம் தேனாம்பேட்டை போலீசார் எழுதி வாங்கியிருந்தனர். இதனிடையே தேனாம்பேட்டையில் மாமுல் கேட்டு மிரட்டிய வழக்கில்  2 மாதத்திற்கு முன் கார்த்திக் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, தியாகராயநகர் துணை ஆணையர் விசாரணை மேற்கொண்டு விதிகளை மீறிய குற்றத்திற்காக நன்னடத்தை காலம் கழித்து மீதமுள்ள 320 நாட்களுக்கு சிறைத் தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்