செல்போனில் பேசியவாறு பைக் ஓட்டி வந்த இளைஞர்- தட்டிகேட்ட போலீசாரை தாக்க முற்பட்டதால் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், செல்போனில் பேசியவாறு பைக் ஓட்டி வந்த ஸ்ரீநாத் என்ற இளைஞர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
செல்போனில் பேசியவாறு பைக் ஓட்டி வந்த இளைஞர்- தட்டிகேட்ட போலீசாரை தாக்க முற்பட்டதால் பரபரப்பு
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்,  செல்போனில் பேசியவாறு பைக் ஓட்டி வந்த ஸ்ரீநாத் என்ற இளைஞர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் காவலரை தாக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஸ்ரீநாத் கைது செய்யப்பட்டார். 

பின்னர் அவரை தாக்க முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஸ்ரீநாத் என்ற இளைஞர் செல்போன் பேசிய படி பைக் ஓட்டி சென்றுள்ளார். இதனை பார்த்த ஒரு காவலர் அவரை தடுத்து நிறுத்தி பைக் சாவியை எடுத்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீநாத் காவலரை தகாத வார்த்தையால் திட்டி தாக்க முற்பட்டுள்ளார். இதனை அடுத்து ஸ்ரீநாத் கைது செய்யப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்