அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனர் மீது சரமாரி தாக்குதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு ரோடு அருகே அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை மூன்று பேர் சரமாரியாக தாக்கிய சம்வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனர் மீது சரமாரி தாக்குதல்
x
* கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு ரோடு அருகே அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை மூன்று பேர் சரமாரியாக தாக்கிய சம்வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* சேலத்திலிருந்து வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை ஓட்டுநர் ஸ்ரீதர் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது அந்த வழியாக சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றவரை ஓரமாக செல்லுமாறு கூறி   ஓட்டுநர் ஹாரன் அடித்ததாக கூறப்படுகிறது.

* இதனால் ஆத்திரம் அடைந்த  இருசக்கர வாகனத்தில் வந்த  கவின் மற்றும் சந்திரன் ஆகிய இருவரும் பேருந்தை நிறுத்தி,  ஓட்டுநர் மற்றும் நடத்துனரை சரமாரியாக தாக்கியுள்ளனர். தனது நண்பர் பரமேஷ் என்பவரையும் போன் செய்து வரவழைத்து அவர்களை தாக்கி உள்ளனர்.

* தாக்கப் பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் பேருந்தை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து தகவலறிந்து அங்கு வந்த ஊத்தங்கரை போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட  மூவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

* பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கொடுத்த புகாரின் பேரில், அவர்கள் மூன்று பேர் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்பு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.




Next Story

மேலும் செய்திகள்