"அரசு அலுவலகங்களில் ரூ.1,500 கோடி மின் கட்டண பாக்கி" - மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்

அரசு அலுவலகங்களில் ரூ.1,500 கோடி மின் கட்டண பாக்கி வைத்துள்ளதாகவும் இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மட்டும் 900 கோடி ரூபாய் மின்கட்டண பாக்கி வைத்துள்ளதாகவும் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்
அரசு அலுவலகங்களில்  ரூ.1,500 கோடி மின் கட்டண பாக்கி - மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்
x
நாமக்கல்லில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டு உள்ள நவீன கேமராக்களி​ன் சேவைகளை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு அலுவலகங்கள் ஆயிரத்து 500 கோடி ரூபாய் மின்கட்டண பாக்கி வைத்துள்ளதாக தெரிவித்தார். இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மட்டும் 900 கோடி ரூபாய் மின்கட்டண பாக்கி வைத்துள்ளதாக கூறினார். தமிழகத்தில் 5 ஆயிரத்து 100 மலைக் கிராமங்களில் 100 சதவீதம் அளவுக்கு மின் இணைப்பு வழங்கப்ப​ட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்