மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக உண்மையை ஒப்புக் கொண்ட விடுதி வார்டன்

கோவையில் மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரத்தில், விடுதி உரிமையாளருக்கு உடந்தையாக இருந்ததாக விடுதி வார்டன் புனிதா ஒப்புக் கொண்டுள்ளார்.
மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக உண்மையை ஒப்புக் கொண்ட விடுதி வார்டன்
x
கோவை பீளமேடு பகுதியில் தங்கியிருந்த  மாணவிகள் மற்றும் பெண்களை தவறாக வழிநடத்தியதாக வழக்கு தொடரப்பட்டதை தொடர்ந்து  வார்டன் புனிதா நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்த போது , விடுதி உரிமையாளருடன் சேர்ந்து மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததை புனிதா ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. 

  2 நாட்கள் விசாரணையை முடித்துக்கொண்டு கோவை நீதிமன்றத்தில் புனிதாவை போலீசார் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து நீதிபதி முன்பு தான் செய்த குற்றத்தை புனிதா ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து புனிதா மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்