ஆடி வெள்ளியில் இணையும் ஆடிப்பெருக்கு விழா - காவிரி கரைகளில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகம்

ஆடிப்பெருக்கு தினமான இன்று, காவிரி கரைகளில் உற்சாகமாக விழா கொண்டாடப்படுகிறது.
ஆடி வெள்ளியில் இணையும் ஆடிப்பெருக்கு விழா - காவிரி கரைகளில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகம்
x
இந்த ஆண்டில், ஆடிவெள்ளி தினத்தில், ஆடிப்பெருக்கு விழா இணைந்துள்ளதால் பெண்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று காவிரி அன்னையை வழிபடுவதோடு, மகாலட்சுமி உள்ளிட்ட பெண் தெய்வங்களையும் பெண்கள் வழிபடுகின்றனர். இதனால், கோவில்களிலும் கூட்டம் அதிகரித்துள்ளது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், ஈரோடு பகுதிகளில் மக்கள் ஆற்றில் புனித நீராடுகின்றனர்.  புதிதாக மணமான பெண்கள், மாங்கல்ய பலம் பெற வேண்டி, புதிய மஞ்சள் கயிறு அணிந்து வழிபடுகின்றனர். ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி தருமபுரி மற்றும் திருச்சி  மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்