சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை அதிகரிப்பு
புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை, 73 லட்சமாக அதிகரித்துள்ளது.
ஆடி மாதத்தையொட்டி, பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பல்லாயிரக்கணக்காக பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி செல்கின்றனர்.
இணை ஆணையர் குமரதுரை மேற்பார்வையில்,அவற்றை எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். கடந்த 12 தினங்களில் மட்டும் 73 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் பணமும், 1 கிலோ 800 கிராம் தங்கம்,7 கிலோ வெள்ளி கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story