வித்தியாசமான முறையில் பதவி ஏற்ற, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருத்தணி முருகன் கோவிலில் உள்ள புறக்காவல் நிலையத்தில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொன்னி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
வித்தியாசமான முறையில் பதவி ஏற்ற, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
x
திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.யாக பணிபுரிந்து வந்த அவர், சில தினங்களுக்கு முன்பு, திருவள்ளூர் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்று திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்த பொன்னி, அங்குள்ள புறக்காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு, பதவியேற்றுக்கொண்டார். 

இதன்பின்னர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பொதுவாக மாவட்ட எஸ்.பியாக பதவியேற்பவர்கள், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதவியேற்பது நடைமுறையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்