உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத விவகாரம்: மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசுக்கு எதிரான வழக்கு - உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு
உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்காத மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு - சென்னை உயர்நீதிமன்றம்
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக செப்டம்பர் 18ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டு, நவம்பர் 17ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என 2017ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி தேர்தல் அறிவிப்பானை வெளியிடாத மாநில தேர்தல் ஆணையம், மற்றும் தமிழக அரசுக்கு எதிராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் விசாரணை நிறைவு பெற்ற நிலையில், தலைமை நீதிபதி அமர்வு, இன்று தீர்ப்பளிக்கிறது.
Next Story