2 ஆண்டுகளுக்கு முன் கட்டுமான பணி முடிந்த கட்டடம் - 2 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத அரசு மாணவர் விடுதி

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் விடுதி
2 ஆண்டுகளுக்கு முன் கட்டுமான பணி முடிந்த கட்டடம் - 2 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத அரசு மாணவர் விடுதி
x
* ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பில், ஆதிதிராவிட நலத்துறை சார்பில் கட்டப்பட்ட அரசு மாணவர் விடுதி சமூக விரோதிகளின் கூடாரமாக மாரி வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

* வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆதிதிராவிட மாணவர்கள் 75 பேர் தங்கி படித்து வந்த அரசு மாணவர் விடுதி 4 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்தது. அதற்கு பதிலாக புதிதாக மாணவர் விடுதி கட்டடம் கட்டப்பட்டது. 

* கட்டுமான பணிகள் முடிந்து 2 ஆண்டுகளாகியும் இன்னும்  திறக்கப்படாமல் உள்ளது. அந்த அரசு விடுதி கட்டடம், 24 மணி நேர குடிகார்களின் மது குடிப்பகமாக மாறி வருகிறது. 

* இதனை தடுத்து மாணவர் விடுதி கட்டடத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

Next Story

மேலும் செய்திகள்