சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க கூடாது - மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர்

வேதத்தில் கூறியுள்ளபடி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க கூடாது என்று மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க கூடாது - மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர்
x
மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடுங்குளிர் காலத்தில் ஐயப்ப விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள், கோவிலுக்கு வரும் போது மலை பிரதேசங்களில் தங்கும் நிலை ஏற்படும் எனவும், அது பெண்களுக்கு சிரமத்தை கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளா​ர். மேலும் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கூடாது என்பது ஒரு மத நம்பிக்கை எனவும், அதனை மனித உரிமை மீறலாக கருதக்கூடாது எனவும் மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் கூறியுள்ளார். வேதத்தில் கூறியுள்ளபடி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்