ஏகாதசி திருவிழா : பாத யாத்திரையில் 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

கும்பகோணத்தில் ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு மகாமக குளத்தில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பாத யாத்திரையாக சென்றனர்.
ஏகாதசி திருவிழா : பாத யாத்திரையில் 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு
x
கும்பகோணத்தில் ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு மகாமக குளத்தில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பாத யாத்திரையாக சென்றனர். கோவிந்தபுரம் பாண்டுரங்கன் கோவிலில் பத்து நாட்களுக்கு ஆஸாடன ஏகாதசி திருவிழா நடைபெற இருக்கிறது. இதனையொட்டி, இன்று அதிகாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்று பக்தி பஜனை பாடல்களை பாடி சென்றனர். முன்னதாக, மகாம குளத்தில் ரதத்தில் எழுந்தருளிய கிருஷ்ணர், ருக்மணிக்கு அதிகாலை ஐந்து மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்